மீண்டும் காதலில் விழுந்தார் செல்வராகவன்

டைரக்டர் செல்வராகவன் மீண்டும் காதலிக்க ஆரம்பித்துள்ளார். விரைவில் அவரையே திருமணமும் செய்யவுள்ளார்.

டைரக்டர் செல்வராகவனும், நடிகை சோனியா அகர்வாலும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியாவும், செல்வராகவனும் காதலிப்பதாகவும், அவர்கள் திருமணம் செய்யவுள்ளனர் என்று செய்தி வந்தது. இந்நிலையில் மீண்டும் காதல் வலையில் சிக்கியுள்ளார் செல்வராகவன். தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு இப்போது 33வயது ஆகிறது. இந்த வயதில் ஒரு மனிதனின் வாழ்க்கை எவ்வளவு அழகாக இருக்கும் என்பதை நான் உணர்வேன். ஆனால் நான் இப்போது, ஒரு 21வயது வாலிபன் செய்யும் வேலையை செய்து கொண்டு வருகிறேன்.

ஆம், நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அந்த பெண்ணும் என்னை மிகவும் நேசிக்கிறாள். காதலுக்காக தினமும் இரண்டு மணி நேரம் அந்த பெண்ணுடன் செலவிடுகிறேன். வாழ்க்‌கையில் நிறைய விஷயங்கள் இழந்துவிட்டதை இப்போதுதான் உணர்கிறேன்.

ஆனால் இப்போது சந்தோஷமாக இருக்கிறேன். விரைவில் அந்த பெண்ணையே திருமணம் செய்ய இருக்கிறேன். அந்த பெண்ணின் பெயரை தற்போது குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், அந்த பெண் நடிகையல்ல, சொல்லப்போனால் சினிமா துறையை சார்ந்த பெண்ணே அல்ல என்று கூறினார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...