கமலுடன் இணையும் செல்வராகவன்

மன்மதன் அம்பு" படத்திற்கு பிறகு டைரக்டர் செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். இதனால் தலைவன் இருக்கிறான் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

"ஆயிரத்தில் ஒருவன்" படத்திற்கு செல்வராகவன் விக்ரமுடன் ஒரு படம் பண்ணப்போவதாகவும், விஜய்யை வைத்து ஒரு படம் பண்ணப்போவதாகவும் செய்திகள் வெளியாயின.

ஆனால் அவையாவும் உண்மையில்லை. செல்வா, தனது தம்பி தனுஷை வைத்து "இரண்டாம் உலகம்" என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதனிடையே கமலை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து கமல் இயக்க இருந்த "தலைவன் இருக்கிறான்" படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தபடத்திற்கான கதையை எழுதி கமலிடம் ‌‌கொடுத்ததாகவும், கமல் அதை படித்து பார்த்து, கமல்
ஓ.கே. சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் இதற்கான அறிவிப்பை கமல் வெளியிடுவார் எனத் தெரிகிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...