நயன்தாரா விவகாரம்: சிம்பு - பிரபுதேவா மோதல்

பிரபுதேவாவை திருமணம் செய்யவிருக்கும் நயன்தாரா விவகாரத்தில் புதிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அவரது முன்னாள் காதலன் சிம்பு - இன்னாள் காதலன் பிரபுதேவா இடையே மோதல் வெடித்துள்ளது.


வல்லவன் படத்தின் மூலம் சிம்பு-நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் காதலாக மாறியது. இருவரும் ஒன்றாக ஹோட்டலில் அறை எடுத்து தங்கும் அளவுக்கு ‌மிக நெருக்கமாக பழகினார்கள்.

இந்நிலையில் சிம்பு விதித்த சில நிபந்தனைகளை நயன்தாரா ஏற்க மறுத்ததால் அவர்களுக்கிடையே மோதல் வெடித்தது. அதே நேரம் சிம்புவும், நயன்தாராம் தனியாக இருந்தபோது எடுக்கப்பட்ட முத்தம் கொடுப்பது போன்ற ஸ்டில்கள் உள்ளிட்ட மிக நெருக்கமான ஸ்டில்கள் வெளியாயின.

அதை பார்த்து டென்ஷன் ஆன நயன்தாரா, சிம்புவுடனான காதலை முறித்துக் கொண்டு சினிமாவை விட்டு விலகி இருக்க விரும்புவதாக கூறி சொந்த ஊருக்கு சென்று விட்டார்.


அதன் பின்னர்தான் பிரபுதேவா இயக்கத்தில் உருவான வில்லு படத்தில் நடித்தபோது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு, பின்னாளில் காதலாகி கசிந்துருகியது. இருவரும் பொதுவிழாக்களில் ஜோடியாக பங்கேற்பது, நட்சத்திர ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவது என கள்ளக்காதல் தொடர்ந்தது.

இந்த கள்ளக்காதல் விவகாரம் பிரபுதேவாவின் மனைவி ரமலத்திற்கு தெரியவர... பெரும் பிரச்சனை வெடித்தது. இப்போதுதான் அந்த பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. ரமலத்திற்கு ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்து சமாதானம் ஆக்கி விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் பிரபுதேவா.

இருவருக்கும் ஜூன் மாதம் விவாகரத்து கிடைக்கவுள்ளது. விவாகரத்து கிடைத்த கையோடு நயன்தாராவை கரம்பிடிக்க உள்ளார் பிரபுதேவா. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே ‌தொடங்கி விட்டன.


இந்நிலையில் புதிதாக மற்றொரு பிரச்சனை கிளம்பியுள்ளது. இம்முறை பிரச்சனை நயன்தாராவுக்கு. நயன்தாராவின் முன்னாள் காதலரான சிம்பு, தனக்கும், நயன்தாராவுக்கும் இடை‌யயான நெருக்கம் மற்றும் நயன்தாரா பற்றிய ரகசியங்களை தன் நண்பர்களிடம் கூறி வருகிறாராம்.

இந்த செய்தி எப்படியோ பிரபுதேவாவின் காதுக்கு எட்ட மிகவும் டென்ஷனாகி போன பிரபுதேவா, சிம்புவை அழைத்து எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிமேல் நயன்தாரா பற்றி பேச வேண்டாம் என்றும் முடிஞ்சது முடிஞ்சுப்போச்சு...

நீ ஒண்ணும் வாய் திறக்க வேண்டாம் என்றும் எச்சரித்திருக்கிறாராம் நடனப்புயல். சிம்புவை பார்த்து முடிஞ்சது, முடிஞ்சு போச்சு, நீ ஒண்ணும் வாயை திறக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...