விஜய் அரசியலுக்கு வருவதை தடுக்கும் சக்திகள்

சினிமாவில் பிரபலமாக இருக்கும் கதாநாயகர்கள் அரசியலுக்கு வருவதை சில சக்திகள் தடுக்கின்றன.

அந்த நடிகரால் தங்கள் எதிர்கால அரசியல் பாதிக்கப்பமோ என்ற அச்சம்தான் இதற்கு காரணம் என்று விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி :


விஜய் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்பதுதான் அவரது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. விஜய்யைப் போல சினிமாவில் பிரபலமாக உள்ள கதாநாயகன் யாராக இருந்தாலும் அரசியலில் ஈடுபடுவதை சில சக்திகள் விரும்புவது இல்லை.

அதனால் தடுக்க வழி தேடுகிறார்கள். அந்த நடிகரால் தங்கள் எதிர்கால அரசியல் பாதிக்கப்படுமோ என்ற அவர்கள் அச்சம்தான் இதற்குக் காரணம். அப்படிப்பட்டவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். அரசியல் சார்புள்ள படங்களுக்கு எதிர்ப்புகள் வருவது சகஜம்.

ஆனால் காவலன் அரசியல் படம் அல்ல. பஞ்ச் வசனங்கள் இல்லை. அது முழுக்க காதல் கதை. அந்த படத்துக்கு நெருக்கடியும், எதிர்ப்புகளும் ஏன் வந்தன என்றே புரியவில்லை. பொங்கலுக்கு காவலன் வராது என்றும் செய்தி பரப்பினார்கள். ரசிகர்கள் கட்- அவுட் வைக்கவும் போஸ்டர்கள் ஒட்டவும் அனுமதிக்கப்படவில்லை.


எம்.ஜி.ஆர். வளர்ச்சியை பார்த்து பயம் ஏற்பட்டதை புரிந்து கொள்ளலாம். ஆனால் விஜய்க்கு ஏன் அப்படி நேர்ந்தது. எம்.ஜி.ஆருடன் விஜய்யை ஒப்பிட முடியாது. ஆனால் அவர் உயரத்துக்கு விஜய்யை கொண்டு செல்வது ஏன்? விஜய் உடனடியாக அரசியலில் ஈடுபட திட்டம் இல்லை. ஆனால் அவர் அரசியலுக்கு வருவது உறுதி. ரசிகர்கள் விஜய் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.

அவர்களிடம் அடுத்த 4 வருடங்கள் ரசிகர் மன்ற அமைப்புகளில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தியுள்ளோம். அவர்கள் விஜய்யை அரசியலுக்கு இழுத்துக் கொண்டு போய்விடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன். விஜய் தனது 40வது வயதில் அரசியலுக்கு வருவது உறுதி.


இவ்வாறு சந்திரசேகர் கூறினார். விஜய்க்கு இப்போது 37 வயது ஆகிறது. சந்திரசேகர் சொல்வதைப் பார்த்தால் இன்னும் 3 வருடங்களுக்கு பிறகுதான் விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் போலிருக்கிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...