தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்

வெயில் படத்தில் இடம்பெற்ற உருகுதே உருகுதே..., மதராசப்பட்டினம் படத்தில் இடம்பெற்ற பூக்கள் பூக்கும் தருணம்..., பையாவில் இடம்பெற்ற அடடா மழைடா அடைமழைடா உள்ளிட்ட எக்கச்சக்க ஹிட் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரரான பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்டிருக்கிறார்.


கோடம்பாக்கத்தின் ஹாட் அண்ட் ஹிட் பாடலாசிரியர் என்று மூத்த பாடலாசிரியர்களே புகழும் அளவுக்கு வார்த்தை ஜாலங்களால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் ந.முத்துக்குமார். பதவியும், புகழும் கிடைத்தால் தானாகவே தலைக்கேறும் தலைக்கணத்துக்கு இவர் மட்டும் விதிவிலக்கா என்ன?


சமீபத்தில் ஏவி.எம். தயாரித்து வரும் முதல் இடம் என்ற படத்திற்கு பாட்டு எழுத வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு விடுத்தவர் படத்தின் அறிமுக இயக்குனரான குமரன். ஏவி.எம்.முக்கெல்லாம் வர முடியாது. முடிஞ்சா என் அலுவலகத்துக்கு வாங்க என்று கூறியிருக்கிறார், முத்துக்குமார்.


விஷயம் ஏவி.எம். சரவணன் காதுகளுக்கு எட்ட..., அவர் எழுதும் பாட்டே நமக்கு வேண்டாம். நமது நிறுவனத்திற்கு என்று ஒரு பெயர் இருக்கிறது. அதை எந்த காலத்திலும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டாம் என்று கூறியதுடன், நா.முத்துக்குமாருக்கு பதிலாக அறிவுமதி, கபிலன், யுகபாரதி ஆகிய மூவரையும் அழைக்கும்படி ஆலோசனை சொன்னாராம். டி.இமான் இசையில் குமரன் நினைத்த மாதிரியே பாடல் கம்போசிங் நடந்து வருகிறது ஏவி.எம் வளாகத்திற்குள்.


மூத்த நடிகர்களும், முன்னணி பாடலாசிரியர்களும் மிகவும் மதிக்கும் நிறுவனத்தை அவமதிக்கும் வகையில் ஏவி.எம். அழைப்புக்கு செவி சாய்க்காமல் மறுஅழைப்பு விடுத்த முத்துக்குமாரின் கதை தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட கதையாகி விட்டது என்று கதைக்கிறது கோடம்பாக்கம்!


இப்படியொரு தலைக்கணத்தாலும், மறுப்பாலும் நஷ்டம் என்னவோ தனக்குத்தான் என்பதையும், எத்தனை உயரத்துக்குப் போனாலும் தன்னடக்கம் தேவை என்பதையும் முத்துக்குமார் புரிந்து கொண்டால் சரிதான்!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...