குழந்தை பெற்றதாக வதந்தி: அலறுகிறார் திரிஷா

வதந்திகளுக்கு பஞ்சம் இல்லாதவர் நடிகை திரிஷா. தொழிலதிபருடன் காதல், ரகசிய திருமணம் என்று அவரைப்பற்றிய வதந்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் ஒவ்வொரு வதந்தியையும் தகர்த்து ஒன்பது வருடமாக சினிமாவில் நிலைத்து நிற்கிறார். இந்நிலையில் திரிஷாவை பற்றி புது வதந்தி ஒன்று கிளம்பியுள்ளது, அவருக்கு தொழிலதிபருடன் திருமணம் நடந்து குழந்தை இருப்பதாக வதந்திகள் பரவத் தொடங்கியுள்ளன.

தமிழில் அஜீத்துடன் "மங்காத்தா" படத்திலும், தெலுங்கில் "தீன்மார்" படங்களில் நடித்து வருகிறார். இந்தபடங்கள் விரைவில் ரீலசாக இருக்கிறது. இந்நிலையில் தனக்கு திருமணம் நடந்து இருப்பதாக பரவிய வதந்தியால், தன்னுடைய சினிமா வாழ்க்கை பாதிக்கும் என்று அச்சப்படுகிறார்.

இந்நிலையில் சூட்டிங்கில் இருந்த திரிஷாவிடம் இதுகுறித்து கேட்ட போது அலறிவிட்டார். அவர் கூறியதாவது, எனக்கு அரசியல் புள்ளி ஒருவரின் மகனுடன் திருமணம் நடந்துவிட்டதாக வதந்திகள் கிளம்பியது.

இப்போது தொழில் அதிபருடன் திருணம் செய்து கொண்‌டதாக வதந்தி. ஆனால் இதனை பலமுறை மறுத்து விட்டேன், ஆனாலும் தொடர்கிறது. அதுகூட பரவாயில்லை எனக்கு குழந்தை இருப்பதாக கூட சிலர் வதந்திகள் பரப்புகின்றனர்.

நான் யாரையும், ரகசிய திருமணம் செய்யவில்லை, அவ்வாறு செய்ய எனக்கு அவசியமும் இல்லை. எனது திருமணத்தை ஊர் அறிய உலகறிய நடத்துவேன். கண்டிப்பாக ரகசிய திருமணம் செய்யமாட்டேன் என்று கோபத்துடன் கூறினார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...