தமிழில் காவலன் படத்தில் வந்த அசினை காட்டிலும், மலையாளத்தில் பாடிகார்ட் படத்தில் வந்த நயன்தாரா நன்றாக நடித்திருக்கிறார் என்று சர்டிபிகேட் தருகிறார் பாலிவுட்டின் முன்னணி நாயகி கரீனா கபூர்.
மலையாளத்தில் ஹிட்டான் "பாடிகார்ட்" படம், தமிழில் காவலன் என்ற பெயரில் ரீ-மேக்கானது. இதில் ஹீரோவாக விஜய்யும், ஹீரோயினாக அசினும் நடித்து இருந்தனர். இப்படத்தை டைரக்டர் சித்திக் இயக்கி இருந்தார்.
இந்நிலையில் இப்படம் இந்தியிலும் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. பாடிகார்ட் என்ற பெயரில் உருவாகி வரும் இப்படத்தில் சல்மான், கான்-கரீனா கபூர் ஆகியோர் நடிக்கின்றனர். டைரக்டர் சித்திக்கே இந்தியிலும் இயக்குகிறார்.
இதனிடையே நடிகை கரீனா கபூரிடம், மலையாள பாடிகார்ட் மற்றும் தமிழ் காவலன் பட டி.வி.டி.க்களை கொடுத்து அதனை பார்க்கும்படி கூறியிருக்கிறார் இயக்குநர் சித்திக்.
இரண்டு படங்களையும் பார்த்த கரீனா, படத்தில் காவலன் அசினை காட்டிலும், பாடிகார்ட்டில் வந்த நயன்தாரா இயல்பாகவும், சிறப்பாகவும் நடித்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.
1 comments:
ஆமோதிகின்றேன். அதைப் போல விஜையை விட திலிப் நன்றாக நிடித்து இருப்பார்.
Post a Comment