ஹீரோவாகிய உதவி டைரக்டர்கள்

பிரபல இயக்குநர்களிடம் உதவி இயக்குநர்களாக இருந்த சுரேஷ் குரு, ஜோதிராஜ், சிவா, கென்னடி ஆகியோர் மைதானம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகின்றனர்.

நெருங்கிய நண்பர்களாக பழகி வரும் 4பேரில் ஒருவன் தன் நண்பனுக்கே துரோகம் செய்கிறார். அதனால் ஏற்படும் பாதிப்புகளை மையமாக வைத்து "மைதானம்" என்ற படத்தை இயக்கி இருக்கிறார் எம்.எஸ்.சக்திவேல்.

இவர் பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்து இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்து இருக்கிறார்.

படம் குறித்து அவர் கூறியதாவது "ஒவ்வொரு காலகட்டத்திலும், கதையை நம்பி மட்டுமே புதுமுகங்கள் அறிமுகமாகி வெற்றி பெறுவதுண்டு. "ஒருதலை ராகம்" முதல் "சுப்பிரமணியபுரம்" வரை பல படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

அதேபோல் என்னுடைய படத்தில் நான்கு புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். இவர்கள் அனைவரும் பிரபல இயக்குநர்கள் அகத்தியன், பாரதி ராஜா, ராமநாரயணன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சுரேஷ் குரு, ஜோதிராஜ், சிவா மற்றும் கென்னடி ஆகியோர் இந்தபடத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகின்றனர்.

இவர்களுடன் டைரக்டர் அகத்தியன், ரமா, ஸ்வாசிகா ஆகியோரும் நடிக்கிறார்கள். நா.முத்துக்குமார் பாடல்களை எழுத, சபேஷ்-முரளி இசையமைக்கிறார்கள்.

எல்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.டேவிட், ஜே.டி.சசீஷ்குமார் ஆகிய இருவரும் தயாரிக்கின்றனர்.

உடுமலைப்பேட்டை அருகில் உள்ள காரத்தொழுவு என்ற கிராமத்தில் 300 வருட பாரம்பரியமுள்ள ஒரு வீட்டில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...