காதலித்து ஏமாற்றியதாக சீமான் மீது பரபரப்பு புகார்

திருமணம் செய்வதாக கூறி நெருங்கி பழகி விட்டு, இப்போது திருமணத்துக்கு மறுப்பதாக டைரக்டரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் செய்துள்ளார்.

பிரண்ட்ஸ், கலகலப்பு, ராமச்சந்திரா, சூரி, எஸ்.மேடம், வாழ்த்துக்கள், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை விஜயலட்சுமி. ஏராளமான கன்னட படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். டைரக்டர் சீமான் இயக்கத்தில் உருவான வாழ்த்துக்கள் படத்தில் நடித்தபோது டைரக்டர் - நடிகை என்ற முறையில் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். 4 பக்க புகார் மனுவில் சீமானுக்கும், தனக்கும் இருந்த உறவு பற்றி விரிவாக எழுதியிருக்கும் விஜயலட்சுமி, அதில் நானும், டைரக்டர் சீமானும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.

திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இதுபற்றி விசாரணை நடத்த சென்னை வளசரவாக்கம் போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் இந்த புகாரை டைரக்டர் சீமான் மறுத்துள்ளார். சீமான் சார்பில் அவரது வக்கீல் சந்திரசேகரன் கூறுகையில், நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்தது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை.

விஜயலட்சுமி, அவரது அக்காள் விவாகரத்து வழக்கு தொடர்பாக உதவி கேட்டு, சீமானை ஒருமுறை சந்தித்து பேசினார். அது தொடர்பாக உதவி செய்யும்படி, சீமான் என்னிடம் கூறினார். அந்த ஒருமுறை மட்டுமே விஜயலட்சுமி சீமானை சந்தித்து பேசினார். அதன்பிறகு, அவர் சீமானை பார்க்கவே இல்லை.

சீமான் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். அவரது பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதை கெடுக்கவும், அரசியலில் சீமானுக்கு உள்ள புகழை அழிக்கவும், திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

யாரோ விஜயலட்சுமியை தூண்டி விட்டுள்ளனர். புகார் கொடுத்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை சட்டப்பூர்வமாக சந்திப்போம், என்றார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...