ஜீவாவிடம் மன்னிப்பு கேட்ட விஜய், ஷங்கர்

ரெளத்திரம் படத்தின் ஆடியோ ரிலசுக்கு வருவதாக கூறி, கடைசிநேரத்தில் வராமல் போனதால் நடிகர் விஜய் மற்றும் டைரக்டர் ஷங்கர் ஆகியோர் ஜீவாவிடம் மன்னிப்பு கேட்டனர்.

டைரக்டரின் ஷங்கரின் இயக்கத்தில் விஜய், ஸ்ரீகாந்த் ஆகியோருடன் மூன்று நாயகர்களில் ஒருவராக நடித்து வரும் ஜீவா, தன்னுடைய ரெளத்திரம் படத்தின் ஆடியோவை ஷங்கர், விஜய், இலியா‌னா வைத்து வெளியிட முதலில் திட்டமிட இருந்தார்.

ஆனால் அன்று மாலை நடைபெற இருந்த நண்பன் பட சூட்டிங் ரத்தானதால், ஷங்கர், விஜய், இலியானா உள்ளிட்டோர் ரெளத்திரம் ஆடியோ ரிலீஸ்க்கு வரவில்லை.

இதனால் கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்டோர்வர்கள் தலைமையில் ஆர்யா, ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் பங்குபெற ரெளத்திரம் படத்தின் ஆடியோ சி.டி.யை வெளியிட்டனர்.

விழாவில் கலந்து கொள்ள முடியாமல் ‌போனதற்காக தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, அவரது மகனும், நடிகருமான ஜிவாவிற்கு போனில் பெர்ஸனலாக சாரி ‌சொன்னார்களாம் ஷங்கர், விஜய் உள்ளிட்ட இருவரும்..! அதிலும் மிஸ்ஸா இலியானா...?

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...