சிம்புதான் என் குரு - சந்தானம்

எனக்கு முதல்பட வாய்ப்பு கொடுத்த சிம்புதான் எனது குரு என்று காமெடி நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.

காமெடியில் நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு என பல முன்னோர்களையும் கலந்துகட்டி கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் சந்தானம் அளித்துள்ள பேட்டியில், நகைச்சுவை நடிகர்கள் என்.எஸ். கிருஷ்ணன், தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், சோ, சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ், வடிவேலு உள்ளிட்டோர் மிகப்பெரிய லைப்ரரி என்றும், அவர்களைப் பார்த்துதான் தினம் தினம் படித்து புதிது புதிதாக காமெடி செய்வதாகவும் கூறியுள்ளார்.

சினிமா உலகில் உங்களது குரு யார் என்று கேட்டால், சட்டென்று சிம்புதான் என் குரு என்று பதில் அளிக்கிறார் சந்தானம்.

ஏன் என்று கேட்டால், சிம்புதான் எனக்கு முதல் பட வாய்ப்பு கொடுத்தார். அவர் கொடுத்த வாய்ப்புதான் என்னுடைய வளர்ச்சிக்கு அஸ்திவாரம் ஆகி விட்டது.

எனவே அவர்தான் என்னுடைய குரு, என்று பெருந்தன்மையுடன் கூறுகிறார்.

சந்தானத்திடம் இருக்கும் இன்னொரு பெருந்தன்மை, தனக்கு பட்டம் எதுவும் வேண்டாம் என்பதுதான்.

உலகத்தையே சிரிக்க வைத்த சார்லின் சாப்ளின், ஹெர்ட்லி ஆகியோருக்கெல்லாம் பெயருக்கு முன்னால் எந்த பட்டங்களும் இல்லை; நானும் அவர்கள் ஜாதி என்று கூறுகிறார் சந்தானம். பலே... பலே...!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...