ஜீவாவுடன் நடிக்க சிம்பு தடுக்கவில்லை - ரிச்சா

ஜீவாவுடன் நடிக்க வேண்டாம் என்று சிம்பு, ஒருபோதும் என்னிடம் சொன்னது இல்லை, இதெல்லாம் வெறும் வதந்தி தான் என்று நடிகை ரிச்சா கூறியுள்ளார்.

தமிழுக்கு வந்திருக்கும் தெலுங்கு புதுவரவு ரிச்சா கங்கோபாத்தியாயே. இவர் தனுஷ் உடன் "மயக்கம் என்ன", சிம்புவுடன் "ஒஸ்தி" படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் இன்னும் ரிலீசாகவில்லை. ஆனாலும் அம்மணிக்கு, தமிழில் ஏகப்பட்ட வரவேற்பு.

இந்நிலையில், சமீபத்தில் நடிகர் ஜீவாவுடன் ஒருபடத்தில் நடிக்க ரிச்சாவுக்கு அழைப்பு வந்ததாகவும், அதில் நடிக்க ரிச்சா முதலில் சம்மதம் தெரிவித்து, பின்னர் முடியாது என்று கூறிவிட்டதாகவும், இதற்கு காரணம் சிம்பு தான் ரிச்சாவை, ஜீவாவுடன் நடிக்க கூடாது என்று கூறியதாகவும் செய்திகள் வந்தது. ஆனால் இதனை ரிச்சா மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஜீவாவுடன் நடிக்க என்னை யாரும் அழைக்கவில்லை. அப்படி இருக்கையில் ஜீவாவுடன் நடிக்க கூடாது என்று என்னை சிம்பு தடுத்ததாக வந்த செய்தி எப்படி உண்மையாக முடியும்.

அதுவெறும் வதந்திதான். என் படம் தொடர்பான விஷயங்களில் யாரையும் தலையிட விடுவது இல்லை. எனக்கென்று சுயபுத்தி உள்ளது என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே "கோ" படத்தில் ஜீவா நடித்தது முதலே, ஜீவாவுக்கும்-சிம்புவுக்கும் இடையே மோதல் உண்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...