குழந்தைகளுக்காக சிகரெட் பிடிப்பதை நிறுத்திய நடிகர்

தனது குழந்தைகளுக்காக சிகரெட் பிடிப்பதை ஹாலிவுட் நடிகர் பிராட்பிட் நிறுத்தியுள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட்பிட். இவர் நடிகை ஏஞ்சலினா ஜூலியுடன் குடும்பம் நடத்தி வருகிறார்.

இந்த தம்பதி ஷகாரா, ஷிலோ, மாட்டாஸ் உள்ளிட்ட 7 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கின்றனர். நடிகர் பிராட்பிட்டுக்கு சிகரெட் பிடிப்பதில் அலாதி பிரியம்.

கணக்கின்றி சிகரெட்டுகளை ஊதி தள்ளுவார். இதனால் உடல் நலத்துக்கு கேடு விளையும் என அவரது மனைவி நடிகை ஏஞ்சலினா ஜோலி அறிவுரை கூறி வந்தார்.

ஆனால் அதை காதில் வாங்கி கொள்ளாத அவர் திடீரென சிகரெட் பிடிப்பதை கை விட்டார். அதற்கு அவரது குழந்தைகள்தான் காரணமாம்.

பிராட்பிட் ஸ்டைலாக சிகரெட் பிடிப்பதை பார்த்த அவரது குழந்தைகள் ஷகாரா, ஷிலோ ஆகியோர் சிகரெட்டை ஹாயாக ஊதி தள்ளினர்.

இதை பார்த்த பிராட்பிட் மனம் மாறியிருக்கிறார்.

தன்னை பார்த்து தன் குழந்தைகள் இது போன்ற கெட்ட பழக்கத்தை பழகுகின்றனர் என்பதை புரிந்து கொண்ட அவர், சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டாராம்.

2 comments:

M.R said...

நல்ல விஷயம் தான் ,எப்பிடியோ நிறுத்தினால் சரி

M.R said...

நண்பரே வோர்ட் வெரிபிகேசன் எடுத்து விடலாமே

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...