பிப்ரவரி மாதம் பிரபுதேவா - நயன்தாரா திருமணம்

பிரபுதேவா இயக்கத்தில் வெளியான வில்லு படத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாரா திருமணம் ஆகாதவர்.

அவரை திருமணம் செய்துகொள்வதற்காக பிரபுதேவா தனது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார்.

அதன்பிறகு பிரபுதேவா, நயன்தாராவுடன் மும்பையிலும், கொச்சியிலும் மாறி மாறி வாழ்ந்து வருகிறார்.

பிரபுதேவா திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வருவதால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டையும், அப்புறம் சமாதானமும் ஏற்பட்டு வருகிறது.

இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இருவரும் வருகிற பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்களாம்.

அதற்காக நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...