என்னோட இந்த நிலைமைக்கு காரணம் என் அம்மாதான் - த்ரிஷா

என்னோட இந்த நிலைமைக்கு காரணமே என் அம்மாதான் என்று நடிகை த்ரிஷா கூறியிருக்கிறார். சினிமாவிலிருந்து ஒதுங்கி கல்யாணம் பண்ணிக் கொண்டு செட்டிலாகப் போகிறார் என்று செய்தி வெளியான பிறகும், சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் த்ரிஷா.

அம்மணியின் மார்க்கெட் மேலும் கூடியிருப்பதால் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தையும் சற்று நிதானப்படுத்தி விட்டாராம் த்ரிஷாவின் அம்மா உமா.

தற்போது தெலுங்கில் இரண்டு படம், தமிழில் சமரன் மற்றும் ஒரு புதிய படம் என பிஸியாக இருக்கும் த்ரிஷா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தன் தாயை புகழோ புகழென்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

"எனக்கு எல்லாமே என் அம்மாதான். என் முதல் பெஸ்ட் பிரண்டும் அவர்தான். எப்போதும் எதுக்கும் தடை போட மாட்டார். அவர் விருப்பங்களை என்மீது திணிக்க மாட்டார். நான் சினிமாவுக்கு வரும்முன்பு மாடலிங் பண்ணேன்.

அதற்காக படிப்பு பாதிக்கப்பட்டது. ஆனால் என் அம்மா எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. மாடலிங் செய்ய அனுமதித்தார். மாடலிங், மிஸ் சென்னை, என மாடலிங்கில் என் கேரியர் கிராஃப் ஏறியபோதுதான் இயக்குனர் பிரியதர்ஷன் நடிக்க அழைத்தார்.

என்னுடைய முதல் படமான லேசா லேசா படம் தோற்றதும் சினிமாவே வேண்டாம்னு விலக நினைச்சேன்.

ஆனால் என் அம்மாதான் அப்போது எனக்கு மனவலியை தந்தாங்க. அடுத்தடுத்த படங்களில் எனக்கு பாராட்டு... வெற்றி எல்லாமே கிடைச்சிடுச்சி.

இன்று நான் ஒரு பெரிய நடிகையாக இருக்கிறேன் என்றால், அதற்கு என் அம்மாதான் முக்கிய காரணம் என்று கூறியிருக்கிறார் த்ரிஷா.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...