முருகன் சென்டிமெண்ட் - திருச்செந்தூரில் விஜய்

வேலாயுதம் ஹிட் ஆனதில் இருந்து நடிகர் விஜய் முருகன் சென்டிமெண்ட் நம்ப ஆரம்பித்து விட்டார். இதையடுத்து தனது அடுத்த படத்தின் சூட்டிங்கை திருச்செந்தூரில் இருந்து தொடங்கும்படி கூறியிருக்கிறாராம்.

வேலாயுதம் படம் ஹிட் ஆனதால் வேலாயுதக்கடவுள் முருகன் சென்ட்டிமென்ட்டோடு, விஜய்யை இணைத்து பேச ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம்.

அதை உறுதி செய்வது போல, தனது அடுத்த படத்தின் ஷெட்யூலை தீர்மானித்தாராம் விஜய்.

படத்தின் தொடக்கவிழா, மற்றும் முதல் பத்து நாட்கள் படப்பிடிப்பு இரண்டுமே திருச்செந்துரில் இருக்கட்டும் என்று கூறியிருக்கிறாராம்.

சூரனை வதம் செய்த முருகன் குடிகொண்டிருக்கும் இடம்தான் திருச்செந்துர்.

எ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் இந்த படத்தில் மும்பை தாதாவாக நடிக்கிறார் விஜய். நாயகன் வெளிவந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் மீண்டும் அதே டைப் கதையை எடுக்கவிருக்கிறார் முருகதாஸ்.

திருச்செந்துரிலிருந்து மும்பைக்கு போகிற விஜய், அங்கு என்னவாகிறார் என்று முடியுமாம் படம்.

இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரியும்தானே?!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...