கோடிகளில் புரளும் இந்திய நடிகைகள்

கோலிவுட் முதல் பாலிவுட் வரை இந்திய அளவில் நடிகைகளின் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளதால் நயன்தாரா, இலியானா, த்ரிஷா போன்ற நடிகைகளின் சம்பளம் கோடியை தொட்டு இருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயரை ப்ரியங்கா சோப்ரா தட்டி சென்றுள்ளார்.

இவர் வாங்கும் சம்பளம் ரூ.9 கோடி. இதற்கு அடுத்தபடியாக ஐஸ்வர்யா ராய் ரூ.6 கோடி சம்பளம் பெறுகிறார். இவர் இந்த தொகையை எந்திரன் படத்திற்காக பெற்றார்.

அடுத்து கத்ரீனா கைப் ரூ.3 கோடியும், தீபிகா படுகோனே ரூ.2.5 கோடியும், வித்யாபாலன் ரூ.1.5 கோடியும் பெறுகின்றனர்.

தென்னிந்திய நடிகைகளை பொறுத்தவரை பாலிவுட் நடிகைகளுடன் ஒப்பிடுகையில் ரொம்ப குறைவு தான். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளாக இருக்கும் அனுஷ்கா, த்ரிஷா ஆகியோரைக் காட்டிலும் பிரபுதேவாவுடனான காதலை முறித்து கொண்ட பின்னர் சினிமாவில் ரீ-என்ட்ரியாகி இருக்கும் நயன்தாரா அதிக சம்பளம் பெறுகிறார்.

அவர் அதிகபட்சமாக ரூ.1.5 கோடி சம்பளம் பெறுகிறார். அதேபோல் நண்பன் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் இலியானாவும் ரூ1.5 கோடி சம்பளம் பெறுகிறார்.

இவருக்கு அடுத்தபடியாக த்ரிஷா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதையடுத்து அவரது சம்பளம் ரூ1.20 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இவர்கள் தவிர அனுஷ்கா, காஜல் போன்றோரும் கோடி ரூபாய் சம்பளம் பெறுகின்றனர்.

கன்னட நடிகை திவ்யா ஸ்பந்தனா ரூ.40 லட்சமும், ப்ரியாமணி ரூ.30 லட்சமும், காவ்யா மாதவன் ரூ.17 லட்சமும், மம்தா மோகன்தாஸ் ரூ.15 லட்சமும் சம்பளமாக பெறுகின்றனர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...