தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்

கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுகிட்டு கொடுக்கும் என்கிற பழமொழி சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் சரியாகி விட்டது. டி.வி., காம்பியரிங்கில் கலக்கிக் கொண்டிருந்த சினகார்த்திகேயன் மெரினா படத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் தன்னை ஒரு நடிகராக எஸ்டாபிளிஷ் பண்ணிக்கொண்டார்.

இப்போது அவர் கோடம்பாக்கத்தில் டிமான்டில் இருக்கிறார். தனுஷின் 3 திரைப்படத்தில் சிறிது நேரம் மட்டுமே வரும் ஒரு ரோலில் நடித்தாலும், அவர் காமெடிக்கும் கெட்டப்பக்கும் வரவேற்பு அமோகமாக இருந்தது. எனவே சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து தனுஷ் ஒரு படம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தினை வெற்றிமாறன் அசிஸ்டென்ட் செந்தில் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ சிவகார்த்திகேயன் காட்டில் மழை.. அதுவும் அடைமழை..

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...