பச்சனுக்கு ஓ.கே., சொல்வாரா நயன்தாரா?

பச்சனுக்கு ஓ.கே., சொல்வாரா என்றதும் ஏதோ அமிதாப் பச்சன் படத்தில் தான் நயன்தாரா நடிக்க போகிறார் என்று எண்ணிவிடாதீர்கள். கன்னடத்தில் பச்சன் என்ற பெயரில் ஒரு படம் உருவாக இருக்கிறது.

இந்தபடத்தில் தான் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் பிஸி நடிகையாகிவிட்டார் நயன்தாரா.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று எல்லா மொழி படங்களிலும் நயன்தாராவின் கால்ஷீட்டுக்காக ஏங்கி நிற்கின்றனர் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும். ஆனால் அம்மணியோ செலக்ட்டிவாக படங்களை தேர்வு செய்து நடிக்கிறார்.

இந்நிலையில் கன்னடத்தில் நடிகர் சுதீப்பை வைத்து டைரக்டர் சசாங் இயக்கும் பச்சன் படத்தில் நயன்தாராவை நடிக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

ஆனால் அவரோ தமிழில் அஜித் படம், தெலுங்கில் ‌கோபிசந்த் படம் என்று பிஸியாக இருப்பதால் கால்ஷீட் இல்லை என்று மறுத்து வருகிறார்.

இருந்தும் அவரது கால்ஷீட் கிடைக்கும் என்று நம்பி வருகிறார் படத்தின் டைரக்டர்.

டைரக்டரின் நம்பிக்கையை நயன்தாரா நிறைவேற்றுவாரா...? பொறுத்திருந்து பார்ப்போம்!!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...