ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்த அமலாபால்

"காதலில் சொதப்புவது எப்படி படம் வெற்றி பெற்றபோதும், அமலாபாலின் மார்க்கெட், இறங்கு முகத்தில் உள்ளது. இதனால், தெலுங்கிற்கு சென்று, கொடி நாட்டப் போவதாக சொன்னார்.

ஆனால், அங்கேயும் சொதப்பல் தான். அதனால், மீண்டும் கோடம்பாக்கம் வந்து, சமுத்திரக்கனி இயக்கும் படத்தில் கமிட்டாகி உள்ளார்.

தமிழில், ஜெயம் ரவி, தெலுங்கில் நானி நடிக்கும் இப்படத்தின் இரண்டு பதிப்பிலும், அமலாபால் தான் நாயகி. ஆக, ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்துவிட்டார், அமலா.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...