மீண்டும் கமலுடன் சிம்ரன்

கமலின் விஸ்வரூபம் ரிலீஸூக்கு ரெடியாகிவிட்ட நிலையில், அவரும் அடுத்த புராஜக்டுக்கு ரெடியாகி விட்டார் என்கிறது கோடம்பாக்க பட்சி.

ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் தலைவன் இருக்கிறான் என்பது தான் அடுத்த புராஜக்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரமாண்ட இயக்குநரின் கால்ஷீட் தள்ளிப்போவதால், நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும் என ஒரு ஃபுல் லென்த் காமெடி ஃபில்முக்கு தயாராகி விட்டாராம் கமல்.

ஏற்கனவே கமலை வைத்து அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம் ஆகிய படங்களை எடுத்த கே.எஸ்.ரவிக்குமார் தான் இந்தப் படத்தை இயக்குகிறார் என்கிறது விவரமறிந்த வட்டாரம்.

மேலும் கிரேசி மோகன் வசனம் படத்திற்கு பிளஸாக அமையும் என்கிறது மற்றொரு தரப்பு.

இப்படி இருக்க படம் பஞ்சதந்திரத்தின் பார்ட் 2 என்றும், மீண்டும் இப்படத்தில் கமலுடன் சிம்ரன் ஜோடி சேர்வார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. எது நிஜமோ!?

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...