ஓடும் ரயிலில் இருந்து குதித்த கார்த்தி - அனுஷ்கா

அலெக்ஸ் பாண்டியன் படத்திற்காக டூப் போடாமல், ஓடும் ரயிலில் இருந்து நடிகர் கார்த்தியும், நடிகை அனுஷ்காவும் குதித்துள்ளனர். சகுனி படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடிக்கும் படம் அலெக்ஸ்பாண்டியன்.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், சுராஜ் இயக்கும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். வில்லனாக பையா மிலிந்த் சோமன் நடிக்கிறார். கூடவே இன்னொரு பிரதான வில்லனாக சுமனும் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்நிலையில் படத்தில் ரயில் சண்டைக்காட்சியை வைத்துள்ளார் டைரக்டர். இதற்காக ஒரு ரயிலை வாடகைக்கு எடுத்து, கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து கிருஷ்ணராஜ சாகர் அணை அருகே சுமார் 15 நாட்கள் இந்த சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளனர்.

ரயிலில் சென்று கொண்டிருக்கும் கார்த்தியை ஹெலிகாப்டரில் மிலிந்த் சோமனும், அவரது அடியாட்கள் டாடா சுமோவிலும் பின் தொடர்கிறார்கள். அவர்களை எதிர்த்து கார்த்தி ஓடும் ரயிலின் மேற்கூரையில் நின்று சண்டை போடுகிறார்.

ஒரு கட்டத்தில் கார்த்தியும், அனுஷ்காவும் பாலத்தில் ரயில் சென்று கொண்டிருக்கும்போது, ரயில் கூரையிலிருந்து ஆற்றில் குதிக்க வேண்டும். இந்தக்காட்சியை டைரக்டர் சொன்னபோது, கார்த்தியும், அனுஷ்காவும் அஞ்சாமல் குதித்துவிட்டார்களாம்.

அதுவும் டூப் கூட போடாமல் தைரியமாக நடித்துள்ளனர். இந்த சண்டைக்காட்சிக்கு மட்டும் சுமார் ரூ.2 கோடி செலவாகியுள்ளதாம்.

இதுகுறித்து டைரக்டர் சுராஜ் கூறும்போது, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதிக்க வேண்டும் என்று அனுஷ்கா-கார்த்தியிடம் சொன்னபோது டூப் வேண்டாம் என்று இருவரும் மறுத்துவிட்டனர்.

அதன் பிறகு ரயிலை மெதுவாக இயக்கச் சொன்னோம். தொடர்ந்து அனுஷ்காவும், கார்த்தியும் ரயிலில் இருந்து கீழே குதித்தார்கள். படம் பிரமாதமாக வர வேண்டும் என்றால் அதைப்பற்றி கவலைப்படாத நிறுவனம் ஸ்டுடியோ கிரீன்.

அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் இப்படம் பிரம்மாண்டமாக வளர்ந்து வருகிறது.

ரூ.2 கோடி செலவில் ஒரு ரயில் சண்டைக் காட்சி படத்தின் பிரம்மாண்டத்திற்கு சிறு உதாரணம் மட்டுமே. இன்னும் படத்தில் ஏராளமான காட்சிகள் உண்டு என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...