தமிழ் சினிமாவில் முதன்முறையாக 7.1 சவுண்ட் தொழில்நுட்பம்

இதுவரை ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த 7.1 சவுண்ட் தொழில்நுட்பம் முதன்முறையாக தமிழ்படம் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அது அமீர் இயக்கத்தில், ஜெயம் ரவி, நீது சந்திரா நடித்து வரும் ஆதிபகவன் படம் தான். ஏ.ஆர்.ரஹ்மானின் ஏ.எம்.ஸ்டூடியோ தான் இந்த தொழில்நுட்பத்தை தமிழ்நாட்டில் புகுத்துகிறது.

இதுகுறித்து அமீர் கூறியுள்ளதாவது, சினிமாவின் வளர்ச்சிக்கு நவீன தொழில்நுட்பங்களும் முக்கிய காரணம்.

ஹாலிவுட் மற்றும் பாலிவுட் சினிமாக்களில் ஏற்கனவே 7.1 சவுண்ட் தொழில்நுட்பம் வந்துவிட்டது. இப்போது தான் தமிழில் முதன்முறையாக புகுத்தப்பட இருக்கிறது.

அதுவும் முதல்படம் என்னுடைய ஆதிபகவன் படம் என எண்ணும்போது பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...