பொன்னியின் செல்வன் இம்முறை செல்வராகவன் கையில்

எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோரால் எடுக்க முடியாமல் போன பொன்னியின் செல்வன் கதையை இப்போது செல்வராகவன் கையில் எடுத்துள்ளார்.

பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து படம் எடுக்க முன்னணி இயக்குநர்களும், நடிகர்களும் பல பேர் முடிவெடுத்து சில காரணங்களால் முடியாமல் ‌போனது.

இந்த கதையை படம் எடுக்க முதலில் பிள்ளையார் சுழி போட்டவரே டைரக்டர் மகேந்திரன் தான். எம்.ஜி.ஆர்-ஐ வைத்து இப்படத்தை இயக்க முயற்சி செய்து திரைக்கதை, வசனம் என எல்லாவற்றையும் ரெடி பண்ணினார்.

ஆனால் அப்போது எம்.ஜி.ஆர்., பல படங்களில் நடித்துக் கொண்டு ஹை பீக்கில் இருந்ததால் அந்த முயற்சியை கைவிட்டார் மகேந்திரன். அதன்பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் இப்படத்தை எடுக்க முயற்சி செய்தார். அவராலும் முடியவில்லை.

சமீபத்தில் டைரக்டர் மணிரத்னம் இப்படத்தை எடுக்க முடிவு செய்து, திரைக்கதை எல்லாம் ரெடி பண்ணி ஹீரோக்களாக விஜய், விக்ரம், ஆர்யா, தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிக்கிறார்கள் என்று அறிவித்தார்.

சரி படமும் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், பட்ஜெட் பிரச்னை உள்ளிட்ட சில காரணங்களால் மணிரத்னத்தின் முயற்சி கைவிடப்பட்டது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க ரொம்ப ஆர்வமாய் இருப்பதாக டைரக்டர் செல்வராகவன் தனது ட்விட்டர் வலைதளத்தில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தை இயக்கலாம் என்று எண்ணியுள்ளேன்.

இதில் ஹீரோக்களாக விக்ரம், ஆர்யா, ஜீவா ஆகியோரை நடிக்க வைக்க எண்ணியுள்ளேன். இதில் விக்ரமிற்கு ராஜராஜசோழன் வேடமும், ஆர்யாவுக்கு கரிகாலன் வேடமும், ஜீவாவிற்கு வந்திய தேவன் வேடமும் பொருத்தமாக இருக்கும் எண்பதால் அவர்களுக்கு இந்த வேடங்களை கொடுக்க எண்ணியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...