விஜய்யிடம் கதையே சொல்லாத கவுதம்மேனன்

"துப்பாக்கி படத்தில் நடித்து வரும் விஜயும், "நீ தானே என் பொன் வசந்தம் படத்தை இயக்கும் கவுதம்மேனனும், அடுத்து, "யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் இணைவர் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது அந்தப் படமே, நிறுத்தப்பட்டு விட்டதாக செய்தி பரவி உள்ளது.

விஜய் தரப்பினரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, "படத்தை ஒப்புக் கொள்வதற்கு முன், கதாநாயகனிடம், இயக்குனர் கதை சொல்ல வேண்டும்.

கதை பிடித்து, கதாநாயகன் சம்மதம் சொன்ன பிறகு தான், அப்படத்தில் அவர் நடிப்பது உறுதி செய்யப்படும்.

ஆனால், கவுதம்மேனன் இதுவரை, விஜயிடம் கதையே சொல்லவில்லை.

முழு கதையையும் அவர் சொல்லி, அதன்பின் விஜய் சொல்லும் முடிவை பொறுத்து தான், அந்தப் படத்தில் நடிப்பாரா, மாட்டாரா என்பது தெரியும், என்கின்றனர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...