மலையாளத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரகுமான்

கோலிவுட், பாலிவுட் படங்களை தாண்டி ஹாலிவுட்டிலும் கால் பதித்து இரண்டு ஆஸ்கர் விருதுகளை தட்டி வந்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். சொந்தமாக இசை ஆல்பம் வெளியிட்டு, அதில் பாடல்கள் பாடி நடித்திருக்கிறார்.

பல இயக்குனர்கள் இவரை தங்களது படங்களில் நடிக்க வைக்க வாய்ப்பு கேட்டும் இவர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் தற்போது மலையாளப் படம் ஒன்றில் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

கேரளாவில் நடிகர் பிஜூ மேனனுடன் இணைந்து தயாரித்து, மலையாள படமொன்றை இயக்குகிறார் ஷஜூன் கரியால்.

5 நண்பர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படத்தின் நாயகன் ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றியவர்.

ஆகையால், இப்படத்தில் கவுரவ வேடத்தில் நடிப்பது குறித்து ஏ.ஆர்.ரகுமானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அவர் இன்னும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை எனவும் கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க காமெடியை மையமாகக் கொண்ட இப்படத்தின் கதை முழுவதும் 2 நாட்களில் நடந்து முடிவது போல் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...