என்னது வடிவேலு சொந்தப்படம் தயாரிக்கிறாரா?


மீண்டும் சினிமாவில் என்ட்ரி ஆக தயாராகி வரும் வடிவேலு, இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகம், தெனாலிராமன் ஆகிய இரண்டு கதைகளை ஓ.கே செய்து வைத்திருக்கிறார். 

ஆனால் இந்த படங்களை பணம் போட்டு தயாரிக்கத்தான் யாரும் முன்வரவில்லை. இதனால் அடுத்து நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்லிக்கொண்டு மதுரைக்கும் சென்னைக்கும் பறந்து கொண்டிருக்கிறார் வடிவேலு.

இந்த நிலையில், சமீபத்தில் வடிவேலு சொந்தமாக படம் தயாரித்து நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. 

ஆனால் இதைப்பற்றி வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடிக்கும் சில நடிகர்களிடம் விசாரித்தபோது, அவராவது சொந்த காசில் படம் எடுப்பதாவது என்கிறார். 

யாராவது பணம் போட்டால் வேண்டுமானால் நடிப்பார். ஒருநாளும் சொந்த காசில் படம் எடுக்க மாட்டார் அவர். 

அவருடன் எந்நேரமும் இருக்கும் நடிகர்கள் நாங்கள். அவர் எவ்வளவு பெரிய கஞ்சன் என்பது எங்களுக்குத்தானே தெரியும். 

அதனால் அந்த செய்தி கண்டிப்பாக உண்மையாக இருக்காது என்கிறார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...