ஹீரோ இல்லாத படம்

ஆர்.ஆர்.கிரியேஷன் என்ற புதிய நிறுவனம் நவரசம் என்ற படத்தை தயாரிக்கிறது. 

இதில் மகேஷ், தஷா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். எம்.கே.சாந்தாராம் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: 

இந்தப் படத்தின் கதை புதிதல்ல. ஆனால் திரைக்கதை ரொம்ப புதுசாக இருக்கும். படத்தின் முதல் காட்சியிலேயே ஹீரோயின் கொலை செய்யப்படுகிறார். 

அவரை கொலை செய்தவர் யாராக இருக்கும் என்ற பட்டியலில் அவரது காதலன், ஒரு எம்.எல்.ஏ, ஒரு அமைச்சர், ஒரு போலீஸ் அதிகாரி, ஒரு வழக்கறிஞர், அக்காவின் கணவர், பக்கத்து வீட்டுக்காரர், ஆபீஸ் மானேஜர், நண்பர் என ஒன்பது பேர் இருக்கிறார்கள். 

இவர்களில் யார் கொலையாளி என்பதை கண்டுபிடிக்க ஒரு போலீஸ் அதிகாரியோ, ஒரு துப்பறிவாளனோ வரமாட்டார்கள். கண்டுபிடிக்கப்போவது படம் பார்க்கும் ஆடியன்ஸ்தான். 

ஹீரோயின் கொலைக்கு பிறகு பிளாஷ்பேக் காட்சிகளாக அவர் இந்த ஒன்பது பேருடன் வரும் காட்சிகள் காட்டப்படும், அப்போது ரசிகர்கள் இவர்தான் கொன்று இருப்பார் என்று முடிவு செய்யும்போது அடுத்தவர் கதை தொடங்கும். 

இப்படியாக ரசிகர்கள் இன்னார்தான் கொலை செய்திருப்பார் என்று முடிவு செய்யும்போது அவர்கள் எதிர்பாராத ஒரு முடிவுடன் படம் நிறைவடையும். இந்த புதிய முயற்சிக்க ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். என்றார்

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...