மீண்டும் யுவன்- செல்வராகவன் கூட்டணி


இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், டைரக்டர் செல்வராகவனும் மீண்டும் கூட்டணி சேரவுள்ளனர். 

துள்ளுவதோ இளமையில் தொடங்கி, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய படங்களில் தொடர்ந்து யுவனின் இசையை தொடர்ந்து வந்தார் செல்வராகவன். 

இவர்களது கூட்டணியில் வெளிவந்த பாடல்களும் சூப்பர்-டூப்பர் ஹிட்டானது.  பின்னர் திடீரென இருவரும் பிரிந்தனர். 

கடைசியாக செல்வாவின் இயக்கத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய படங்களுக்கு ஜி.வி.பிரகாஷுடன் கைகோர்த்தார். 

ஆனால் இந்த இரு படங்களுமே பெரிதாக பேசப்படாமல் போயின. அடுத்து விரைவில் வெளிவர இருக்கும் இரண்டாம் உலகம் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்துள்ளார் செல்வராகவன்.

இந்த நிலையில் தற்போது யுவனும், செல்வாவும் மீண்டும் இணைந்துள்ளனர். 

இரண்டாம் உலகம் படத்தினைத் தொடர்ந்து சிம்புவை வைத்து ஒரு படம் இயக்குகிறார் செல்வராகவன். 

இப்படத்திற்கு யுவன் இசையமைக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...