மீண்டும் பட தயாரிப்பில் இயக்குனர் ஷங்கர்


காதல், வெயில், கல்லூரி, அறை எண்-305ல் கடவுள், இம்சை அரசன் 23ம் புலிகேசி, ஈரம் போன்ற படங்களை தன், "எஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தவர் இயக்குனர் ஷங்கர். 

இதில் சில படங்கள் வெற்றி பெற்ற போதும், பல படங்கள் தோல்வியடைந்து பலத்த நஷ்டத்தை கொடுத்ததால், அதன் பிறகு படம் தயாரிப்பதையே அவர் நிறுத்தி விட்டார்.

ஆனால், இப்போது எழுத்தாளர் ஒருவர் கூறிய கதை, அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டதாம். இதனால், மீண்டும் படம்  தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஷங்கர். 

இதையடுத்து, "எஸ் பிக்சர்சை நோக்கி வாய்ப்புக் கேட்டு,  இயக்குனர்கள் படையெடுக்கத் தொடங்கி உள்ளனர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...