ஹன்சிகாவுக்காக நான் காத்திருக்க வேண்டுமா? - அஞ்சலி


ஆர்யா நடிப்பில் டில்லி பெல்லி இந்தி படத்தின் ரீமேக்கில் தயாராகி வரும் படம் சேட்டை. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா, அஞ்சலி இருவரும் நடித்து வருகிறார்கள். 

முதலில் அஞ்சலிக்கே முதன்மை நாயகி அந்தஸ்தை கொடுத்தவர்கள், பின்னர் ஹன்சிகாவின் மார்க்கெட் எகிறியததைத் தொடர்ந்து இப்போது ஹன்சிகாவை முதன்மை நாயகியாக்கி விட்டனர். 

இந்த சேதியறிந்த அஞ்சலி ஆவேசமாகி விட்டாராம்.

என்றாலும் அதுசம்பந்தமாக நேரடியாக மோதினால் தனக்குத்தான் பாதிப்பு என்பதால், சில நாட்களில் ஹன்சிகாவுடன் இணைந்து நடிக்க வேண்டிய காட்சிகளுக்காக, தான் ஸ்பாட்டுக்கு வரும்போது ஹன்சிகா அங்கு இல்லையென்றால் கடுப்பாகி விடுகிறாராம் அஞ்சலி. 

அதோடு அவர் வரும்வரை காட்சிகளை படமாக்காமல் தன்னை காக்க வைத்தால் இன்னும் அவருக்கு ப்ரஷ்ஷர் ஏறுகிறதாம். 

அதனால், இதோ ஒரு மணிநேரத்தில் வருகிறேன் என்று சொல்லிட்டு அங்கிருந்து எஸ் ஆகும் அஞ்சலி, அதன்பிறகு அன்றைக்கு முழுக்க ஸ்பாட்டில் தலைகாட்டுவதே இல்லையாம். 

இதனால் அதன்பிறகு ஸ்பாட்டுக்கு வந்து அஞ்சலியின் வருகைக்காக காத்திருந்து விட்டு வெறுப்போடு வெளியேறுகிறாராம் ஹன்சிகா.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...