பரதேசி பட நடிகர், நடிகைகளுக்கு பாலா போட்ட வாய்ப்பூட்டு


டைரக்டர் மணிரத்னம் பாணியில் தான் இயக்கும் படங்களைப்பற்றிய எந்தவொரு செய்தியும் வெளியில் கசிந்து விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருப்பார் டைரக்டர் பாலா. 

அதனால் அவர் இயக்கும் ஒவ்வொரு படங்களும் திரைக்கு வரும் வரை சஸ்பென்சாகவே இருந்து வருகிறது. 

ஆனால் பரதேசி படத்தில் நாயகனாக நடிக்கும் அதர்வா, சாமியார் கோலத்தில் தெருவில் பிச்சை எடுப்பது போல் அவர் படமாக்கிய காட்சி வெளியில் கசிந்து விட்டதையடுத்து உஷாராகி விட்டார் பாலா.

அதைத் தொடர்ந்து படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை மலைப்பகுதிகளுக்கு மாற்றிய அவர், படத்தின் கதை மற்றும் படத்தில் நடிப்பவர்கள் எந்தமாதிரியான கேரக்டர்களில் நடிக்கிறார்கள் என்பது உள்ளிட்ட எந்தவொரு செய்தியையும் வெளியில் மூச் விடக்கூடாது என்று பரதேசி படத்தில் பணியாற்றிய மொத்த கலைஞர்களுக்கும் ஆணை பிறப்பித்திருக்கிறார் பாலா. 

இதன்காரணமாக படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள அதர்வா, வேதிகா, தன்சிகா உள்ளிட்டோர் பரதேசி படம் பற்றி யாராவது வாயை கிளற ஆரம்பித்தாலே, பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓட்டம் பிடிக்கிறார்கள்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...