சர்ச்சையை உருவாக்குகிறார் எஸ்.ஜே.சூர்யா


வாலி, குஷி என்று வேகமாக முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. 

ஆனால் பின்னர் அவருக்கும் ஹீரோ வேசம் போடும் ஆசை ஏற்பட்டதால், சில படங்களில் நடித்தவர், சில காலத்தில் காணாமல் போனார். 

இருப்பினும் தற்போது இசை என்ற படத்தின் மூலம் மீண்டும் மீண்டு வந்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

ஆனால் இந்த ரவுண்டில் கண்டிப்பாக ஏதாவது பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டே களத்தில் இறங்கியுள்ளார். 

அதன்காரணமாக, இரண்டு இசையமைப்பாளர்களுக்கிடையே வெடிக்கும் ஈகோ பிரச்னையை மையப்படுத்தி கதை பண்ணியிருக்கிறார். 

இதில் இளையராஜாவாக பிரகாஷ்ராஜூம், ஏ.ஆர்.ரகுமானாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கிறார்களாம். 

அவர்களுக்கிடையே நடக்கும் தொழில் போட்டியும் இதில் இடம்பெற்றுள்ளதாம். 

அதனால் இந்த படம் திரைக்கு வரும் நேரத்தில் மேற்படி இசையமைப்பாளர்களின் எதிர்ப்பும், சர்ச்சையும் உருவாகும் என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...