ஆஸ்கர் பிலிம்சுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய பிந்து மாதவி


ஆதி நடித்த ஈரம் படத்தை இயக்கியவர் அறிவழகன். இவர் அந்த படத்தையடுத்து ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் வல்லினம் என்ற படத்தை இயக்கி வருகிறார். 

நகுல் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் முதலில் பிந்து மாதவிதான் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். 

ஆனால் பின்னர், தமிழில் பல படங்கள் அவருக்கு கமிட்டானதால் வல்லினம் படத்துக்கு சரியாக கால்சீட் கொடுக்காமல் இழுத்தடித்து வந்திருக்கிறார். 

இதனால் சிலமுறை படப்பிடிப்பு தேதி குறிக்கப்பட்ட பின்னர் கேன்சல் ஆகியிருக்கிறது.

இப்படி தொடர்ந்து பிந்து மாதவி டேக்கா கொடுத்ததால் 10 நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், பிந்து மாதவியை படத்திலிருந்தே தூக்கி கடாசி விட்டு இப்போது ஒரு பெங்களூர் நடிகையை ஒப்பந்தம் செய்து படமாக்கி வருகின்றனர். 

ஆனால் பிந்து மாதவி பத்து நாட்களாக நடித்த காட்சிகளை மீண்டும் ரீஷூட் செய்திருக்கிறார்கள். 

அந்தகாரணமாக, ஆஸ்கர் பிலிம்சுக்கு 25 லட்சம் வரை வீண் செலவாகி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...