பரபரப்பை கிளப்ப போகும் தெலுங்கு டப்பிங் படம்

எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் புகழ் பெற்றவர் சர்வானந்த், இவர் சாய்குமாருடன் இணைந்து நடித்துள்ள தெலுங்கு படம் "பதவி" என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. 

இன்னொரு நாயகனாக சந்தீப் நடிக்கிறார். மூத்த அரசியல்வாதியின் இரண்டு வாரிசுகளுக்கு இடையேயான போட்டிதான் கதை. 

மூத்த அரசியல்வாதி சாய்குமாரின் வாரிசுகளாக சர்வானந்தும், சந்தீப்பும் நடித்துள்ளனர். 

இன்றை அரசியல் சூழ்நிலைக்கேற்ப அனல் பறக்கும் வசனங்கள் படத்தில்  இருக்கிறதாம். 

கே.தேவா என்பவர் இயக்கி இருக்கிறார். பிரபாகர் தமிழ் வசனங்களையும், பிறைசூடன் பாடல்களையும் எழுதி உள்ளார். 

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...