விஸ்வரூபத்தால் கமலுக்கு பைத்தியம் பிடித்துள்ளது - பாலுமகேந்திரா


விஸ்வரூபம் படத்தை பார்க்கும்போது கமலின் முழு ஈடுபாடு தெரிகிறது, இந்த படத்திற்காக கண்டிப்பா அவருக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும் என பாலுமகேந்திரா கூறியுள்ளார். 

பல்வேறு பிரச்னைகளை கடந்து கமலின் விஸ்வரூபம் படம் வருகிற ஜன-25ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனால் ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் கமல். 

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தை இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு போட்டு காட்டியுள்ளார் கமல். படத்தை பார்த்து வியந்து போய்  உள்ளார் பாலுமகேந்திரா. 

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, விஸ்வரூபம் படத்தை பார்க்கும் போது கமலின் முழு உழைப்பும் தெரிகிறது. 

எந்தளவுக்கு அவர் கஷ்டப்பட்டு இருப்பார் என எண்ணத் தோன்றுகிறது. நிச்சயம் இந்தபடத்திற்காக அவருக்கு பைத்தியம் பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன். அதுவும் சினிமா பைத்தியம். 

அந்த பைத்தியம் இருக்கும் வரை கமலை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. கமலை எல்லோரும் உலகநாயகன் என்று அழைக்கின்றனர். 

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு அவரை உலகஇயக்குனர் என்று அழைப்பார்கள், என்னைப்போலவே கமலும் சினிமாவை நேசிப்பவர். அதற்காக அவரை ‌எண்ணி பெருமை அடைகிறேன் என்று கூறியுள்ளார். 

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...