விஸ்வரூபம் பிரச்னை - கமலுக்கு ரஜினி காந்த் ஆதரவு

விஸ்வரூபம் படப்பிரச்னையில் தான் மிகவும் புண்பட்டிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 40 ஆண்டுகளாக நடிகர் கமலஹாசனை தான் அறிவேன் என்றும் அவர் யாருடைய மனதையும் புண்படுத்தாதவர் என்றும், முஸ்லிம்கள் மீது மதிப்பு வைத்திருப்பதால் தான் அவர்களுக்கு படத்தை திரையிட்டு காட்டினார் என்றும் கூறியுள்ளார். 

மேலும், ரூ. 100 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்பட வெளியீடு தாமதமாவதால், கமல் எந்தளவு மனம் புண்பட்டிருப்பார் என்பதை தான் உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்தியவர் கமலஹாசன் என்றும் கூறியுள்ளார். 

இவ்விவகாரத்தில் இருதரப்பினரும் அமர்ந்து விவாதிக்க வேண்டும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை கூறியுள்ளார். 

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...