சித்தார்த்-சமந்தா கல்யாண ஏற்பாடுகள் தீவிரம்



இதுவரை வதந்தியாகவே இருந்து வந்த சித்தார்த்& சமந்தா காதல் இப்போது உறுதியாகிவிட்டது. இருவரும் விரையில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். 

இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்ட நிலையில் ஜாதகப் பொருத்தம் பார்த்ததில் அதில் ஒரு சிறிய குறை இருந்ததால் இருவரும் தங்கள் பெற்றோருடன் காளகஸ்திக்கு வந்து அந்த குறையை போக்க சிறப்பு பூஜைகளை செய்து விட்டார்கள். 

அடுத்து இருவரின் திருமண ஏற்பாடுகளை பெற்றோர் மும்முரமாக கவனித்து வருகிறார்கள். 

இருவருமே தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். மார்க்கெட்டில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். இப்போது திருமணம் செய்து கொண்டால் அது பாதிக்குமே என்ற நினைக்கிறார்கள். 

ஆனால் பெற்றவர்கள் உடனடியாக திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று சொல்கிறார்கள். அதனால் கையில் இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்து விட்டு திருமணம் செய்து கொள்வார்கள் என்று தெரிகிறது. 

இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடந்து விடும் என்கிறார்கள். தமிழ் நாட்டில் பிரசன்னா-சினேகா திருணமத்தை ஒரு தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்ப 50 லட்சம் கொடுத்தது. 

சித்தார்த்-சமந்தா திருமணத்தை ஒளிபரப்ப 2 கோடி வரை தர சேனல்கள் முன்வந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...