பாடகர் ஆனார் பவர் ஸ்டார்


குறுகிய காலத்தில் சினிமாவின் அத்தனை ஏரியாக்குள்ளும் பவர் ஸ்டார் சீனிவாசனை அழைத்துச் சென்று விட்டார்கள். கடைசியாக அவரை பாடகராகவும் ஆக்கி விட்டார்கள். 

ஆர்.ஆர்.சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் "சுட்ட பழமும் சுடாத பழமும்" என்ற படத்தில் பவர் ஸ்டார் ஒரு பாடல் பாடிவிட்டார். 

சமர்த், லதாராவ், என்ற புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தை சிவாஜி என்ற புதுமுகம் இயக்குகிறார். கார்த்திக் என்பவர் இசை அமைத்துள்ளார். இதில் முத்து விஜயன் எழுதிய...

துட்டுன்னா துட்டு மழை கொட்டுது மாமு...
அண்டாவ கொண்டு வந்து அள்ளிக்க மாமு... 

என்ற பாடலை பவர் ஸ்டார் பாடியுள்ளார். ரீ டேக்கே இல்லாமல் ஒரு மணி நேரத்தில் பாடலை பாடிவிட்டு கிளம்பி விட்டாராம். பாட்டு பாட அருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சம்பளம் 2 லட்சம் ரூபாய். 

இந்த பாடலுக்கான காட்சியில் அவரே ஆடவும் உள்ளார். பப்லி என்ற மும்பை மாடல் அழகி உடன் ஆடப்போகிறார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...