எனக்கு திருமணமா? செம காமெடி - கலாய்க்கிறார் நயன்தாரா


பொதுவாக, நடிகைகளுக்கு இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றிகரமாக அமைவது இல்லை. அப்படியே அமைந்தாலும், அம்மா, அக்கா, அண்ணி வேடங்கள் தான், கிடைக்கும்.  

இந்த விஷயத்தில், நயன்தாரா விதிவிலக்கு. இரண்டாவது இன்னிங்சில், தமிழ், தெலுங்கில், ரவுண்டு கட்டி அடிக்கிறார். இவர் நடிக்கும் அனைத்து படங்களுமே, முன்னணி ஹீரோக்கள் படங்கள் தான். 

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், திருமணம் குறித்து கூறுகையில்,"என் திருமணத்தை பற்றி, இப்போது யோசிக்கவே இல்லை. 

அதற்கு நேரமும் இல்லை. என் வாழ்க்கையில், எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்தன. எனவே, என் எதிர்காலத்தை கடவுள் கையில் கொடுத்து விட்டேன். 

கடவுள் விருப்பத்தின்படி தான், எல்லாம் நடக்கும். எதுவுமே, நம் கையில் இல்லை என்றார்.  

மேலும், அவர் கூறுகையில்,"ராம ராஜ்யம் படத்தில் சீதையாக நடித்த பின், கிளாமராக நடிக்க மறுப்பதாக என்னைப் பற்றி செய்திகள் வருகின்றன. 

படங்களில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை, நான் முடிவு செய்ய முடியாது. படத்தின் கதை தான், முடிவு செய்கிறது என்கிறார், நயன்தாரா.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...