ஜூன் 27-ல் சைந்தவியை கைப்பிடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்


வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். 

ஏ.ஆர்.ரஹ்மானின் அக்காள் மகனான இவர், சிக்குபுக்கு ரயிலே பாடலின் ஆரம்ப வரிகளை பாடி சினிமாவுக்கு அறிமுகமானர். 

அதையடுத்து ரஹ்மானின் சில பாடல்களில் குழந்தை குரலில் அப்போது பாடிய பிரகாஷ்குமார், அதையடுத்து, சினிமாவை விட்டு விலகியிருந்தார். பின்னர் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக உருவெடுத்தார். 

தற்போது 25 படங்கள் வரை இசையமைத்துள்ள அவர், பாரதிராஜாவின் அன்னக்கொடி, விஜய்யின் தலைவா உள்பட பல மெகா படங்களுக்கு தற்போது பிசியாக இசையமைத்து வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ்குமாரும், பாடகி சைந்தவியும் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் படித்தபோதே நண்பர்களாம். 

அப்படி தொடங்கிய பழக்கம், பின்னர் சினிமாத்துறைக்குள் வந்தபோது காதலாக மாறியிருக்கிறது. 

காதலுக்கு இருவரது பெற்றோரும் பரிபூரண சம்மதம் சொல்லி விட்டதால், திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. 

இந்நிலையில், தற்போது ஜூன் 27-ந்தேதி சென்னையில் அவர்களது திருமணத்தை நடத்த இருவீட்டாரும் முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...