தமிழ் சினிமாவுக்கு இன்னொரு அமலாபால்


சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், டிஷ்யும், பூ போன்ற படங்களை இயக்கியவர் சசி. எப்போதும் தனக்கென மென்மையான பாணியில் படம் எடுத்தவர், முதன்முறையாக ஆக்ஷ்னுக்கு மாறியுள்ளார். 

தற்போது பரத்தை வைத்து 555 என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் பரத், அரவிந்த் என்ற கம்ப்யூட்டர் இன்ஜினியராக நடித்துள்ளார். 

555-வில் அரவிந்த் என்ற பரத்துக்கு இரண்டு ஜோடி. ஒருவர் மும்பை மாடல் எரிகா பெர்னாண்டஸ், இன்னொருவர் மிர்திகா. கேரளாவில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலானவர் மிர்திகா. 

அங்கு பேஷன் டிசைன் படித்து கொண்டிருந்தவருக்கு கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வாய்ப்பு வந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டைரக்டர் சசி, முறைப்படி அவர் அப்பா, அம்மாவிடம் பேசி அனுமதி பெற்று தன் படத்தில் நாயகியாக்கியுள்ளார். 

விஷயம் என்னவென்றால் மிர்திகாவை பார்த்தால் ஒருசாயலில் அமலாபால் போன்றே இருக்கிறார் என்று எல்லோரும் சொல்லி வருகிறார்கள். இதைப்பற்றி அவரிடம் கேட்டால் நான் அமலா பாலை பார்த்தது இல்லை, கேள்விபட்டிருக்கிறேன். 

எனக்கே ஆச்சரியமா இருக்கு என்கிறார். இவரைப்பற்றி கூடுதல் செய்தி என்னவென்றால் சரளமாக தமிழ் பேசுகிறார், கூடவே நன்றாக டான்சும் ஆடுகிறார். மேலும் தனது இனிமையான குரலில் தமிழ் பாடல்களை பாடியும் அசத்துகிறார். 

ஆக இனி மைனா அமலாபால் கால்ஷீட் கிடைக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கிறார் மிர்திகா என்று அனைவரும் அவர் பக்கம் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் கோலிவுட்காரர்கள். 

ஒருவேளை அப்படி நடந்தால் அதற்கு டைரக்டர் சசிக்கு தான் கோலிவுட்காரர்கள் நன்றி சொல்ல வேண்டும்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...