ரசிகர்களுக்கு அஜீத்தின் வேண்டுகோள்


பல நடிகர்கள் தங்கள் படங்கள் ரிலீசாகும்போது, ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டுவது. 

தியேட்டர்களில் தங்களுக்கு ராட்சத கட்-அவுட்கள் வைத்து பாலாபிஷேகம் செய்வது போன்ற விசயங்களுக்காகத்தான் ரசிகர் மன்றங்களை யூஸ் பண்ணி வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர் மன்றங்களை தங்களுக்கு பெரிய பலம் என்று பெருவாரியான நடிகர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அஜீத் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவராக இருக்கிறார். ரசிகர் மன்றத்தில் அரசியல் நுழைகிறது என்று தெரிந்ததும் உடனடியாக மன்றங்கள் அனைத்தையும் கலைத்தார். இருப்பினும் ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை. அவரது பிறந்த நாள் மற்றும் படங்கள் வெளியாகும்போது தாங்களது சொந்த பணத்திலேயே கட்அவுட்கள் வைத்து வருகிறார்கள்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அஜீத். எனக்கு கட்அவுட்கள், போஸ்டர்களுக்காக நீங்கள் செலவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அப்படி செலவு செய்யும் பணத்தை, படிக்க வசதி இல்லாமல், சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படும் ஏழைகளுக்கு கொடுத்து உதவி செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...