கெளதம்மேனனை கைது செய்ய இடைக்காலத்தடை


தமிழில் தான் இயக்கிய விண்ணைத்தாணடி வருவாயா படத்தை இந்தியில் பிரதீக்-எமிஜாக்சனை வைத்து ஏக்திவானாதா என்ற பெயரில் ரீமேக் செய்தார் கெளதம்மேனன். 

அந்த படத்தை தயாரிக்க தன்னுடன் ஜெயராமன் என்பவரையும் பங்குதாரராக இணைத்துக்கொண்டார். அந்த வகையில் 13.58 கோடியில் தயாரிக்கப்பட்ட அப்படத்துக்கு ஜெயராமன் குறைந்த அளவே முதலீடு செய்திருந்தாராம். 

ஆனால், அப்படத்தில் தான் பெற்ற லாபத்தில் ஜெயராமனுக்கு சேர வேண்டிய லாபத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டாராம் கெளதம்மேனன்.

அதனால் இதுகுறித்து புகார் செய்தார் ஜெயராமன். ஆனால் இந்த பிரச்னையில் தான் கைதாகலாம் என்று நினைத்த கெளதம்மேனன் முன்கூட்டியே முன்ஜாமீன் வாங்கி விட்டாராம். 

அதையடுத்து இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிபதி, வருகிற 26-ந்தேதி வரை கெளதம்மேனனை கைது செய்ய இடைக்காலத் தடைவிதித்தார். 

அதோடு, போலீசாரின் விசாரணைக்கு கெளதம்மேனன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவளித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...