ஏ.ஆர்.ரஹ்மான்-யுவன்ஷங்கர்ராஜா புதிய கூட்டணி


வந்தே மாதரம் ஆல்பத்தை இயக்கிய பரத்பாலா இயக்கும் படம் மரியான். இந்த படத்தில் மீனவன் வேடத்தில் தனுஷ் நடித்துள்ளார். 

நாயகியாக பூ பார்வதி நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

இன்னும் சில பாடல்கள் மட்டுமே படமாக இருக்கும் இப்படத்தில் தனுஷ் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். 

கிட்டத்தட்ட அவரது ஒய்திஸ் கொலவெறி பாடல் பாணியில் அமைந்துள்ள அந்த கலக்கலான பாடலை ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா பாடியிருப்பதுதான் சிறப்பு.

சமீபத்தில் தில்லு முல்லு என்ற படத்தில் எம்.எஸ்.வியுடன் இணைந்து இசையமைத்ததோடு, பாடல் காட்சியிலும நடித்துள்ள யுவன், இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் முதன்முறையாக பின்னணி பாடியிருப்பது எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. 

இப்பாடல் மிகப்பிரமாதமாக வந்திருப்பதாக சொல்லி, எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்துகிறார் இயக்குனர் பரத்பாலா.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...