சூர்யா நடிப்பில் தயாராகும் கஜினி Part 2


சூர்யா, அசின், நயன்தாரா இணைந்து நடித்து 2005-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் 'கஜினி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். சேலம் ஏ.சந்திரசேகரன் தயாரித்தார். 

இப்படம் அமீர்கான், அசின் ஜேடியாக இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. படம் வசூலில் சக்கை போடு போட்டது. 

எனவே இதன் இரண்டாம் பாகத்தை 'கஜினி பார்ட்-2‘ என்ற பெயரில் எடுக்க தயாரிப்பாளர் சேலம் ஏ.சந்திரசேகரன் முயற்சி மேற்கொண்டு உள்ளார். 

இந்த படத்தில் சூர்யா நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறும்போது, சினிமா உலகில் மனித நேயம் குறைந்து வருகிறது. கஷ்டப்படுகிற தயாரிப்பாளர்களுக்கு கைகொடுக்க ஆள் இல்லை. 

சூர்யா ‘கஜினி-2’ படத்தில் நடித்து சேலம் சந்திரசேகருக்கு கைகொடுக்க வேண்டும் என்றார். 

சேலம் சந்திரசேகரனிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:- ‘கில்லாடி’ படம் ரிலீசானதும் ‘கஜினி-2’ பட வேலைகள் துவங்கப்படும். 

இதற்காக ‘கஜினி-2’ படபெயரை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ளேன். ஏற்கனவே கஜினி படத்தில் சூர்யா பிரமாதமாக நடித்து இருந்தார். 

அமீர்கானைவிட சூர்யாதான் கேரக்டருக்கு மிக பொருத்தமாக இருந்தார். எனவே அவர்தான் ‘கஜினி-2’ படத்தில் நடிக்க வேண்டும். அவரை நேரில் சந்தித்து இதுபற்றி பேசுவேன். 

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...