ஹன்சிகாவை அதிர வைத்த புதுவரவு நடிகை


தற்போது தமிழ் சினிமாவில் அதிக படங்களை வைத்திருக்கும் நடிகை ஹன்சிகாதான். அதோடு முன்னணி நடிகர்களின் படங்களாகவும் வைத்திருக்கிறார். 

அதனால் இப்போதைக்கு தன்னை வீழ்த்த நடிகைகள் இல்லை என்பதுதான் அவரது எண்ணமாக இருந்தது. 

ஆனால், புதிதாக கேரளத்தில் இருந்து வந்துள்ள லட்சுமிமேனன் வேகவேகமாக படங்களை கைப்பற்றியிருப்பதால், மனதளவில் அதிர்ச்சியடைந்திருக்கிறார் ஹன்சிகா.

அதனால், லட்சுமிமேனனைப்பற்றிய செய்திகளை தனது உதவியாளர்கள் மூலம் திரட்டி வருகிறாராம் ஹன்சிகா. 

அதில் கும்கி, சுந்தரபாண்டியன், படங்களுக்குப்பிறகு இப்போது அவர் கைவசம் 4 படங்கள் உள்ளன், விஷால், சித்தார்த், சசிகுமார், விமல், கெளதம் என பேசப்படும் நடிகர்களின் படங்களாக வைத்திருக்கிறார். 

இத்தனைக்கும் துளியும கவர்ச்சி காட்டாமல் அவரது கால்சீட் பாக்கெட் நிரம்பி உள்ளது என்றும் ஹன்சிகாவிடம் தெரிவித்துள்ளர்களாம்.

இதனால், சேட்டையைப்போன்று நடித்து வரும் படங்கள் ஊத்திக்கொண்டால், அடுத்து புதிய படங்களுக்கு வழியில்லாத நிலை தனக்கு ஏற்படும் என்ற அச்சத்தில் இருக்கும் ஹன்சிகா, தமிழில் நடித்தபடியே தெலுங்கிலும் மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என்று இப்போது புதிய தெலுங்கு படங்களுக்கான முயற்சிகளிலும் இறங்கியுள்ளாராம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...