3 நாட்களில் 21 கோடி வசூல் செய்த தனுஷின் ராஞ்சனா


இந்தியில் தனுஷ் நடித்துள்ள முதல் படம் ராஞ்சனா. என்னதான் தமிழில் அவர் முன்னணி நடிகராக இருந்தாலும் பாலிவுட்டைப்பொறுத்தவரை புதுமுகமே என்பதால், படத்திற்கு எந்த மாதிரியான ஓப்பனிங் இருக்கப்போகிறதோ என அனைவரும் மனதளவில் பயந்துதான் இருந்தனர். 

ஆனால், கடந்த 21-ந்தேதி திரைக்கு வந்த அப்படம் முதல் மூன்று நாட்களிலேயே 21 கோடியை வசூல் செய்து விட்டதாம். 

இதனால் படத்துக்காக செலவு செய்தவர்களுக்கு போட்டதை விட அதிகம் எடுத்து விடலாம் என்ற நம்பிக்கை துளிர் விட்டிருக்கிறதாம்.

அதேசமயம், பாடி பில்டர்களாக இருக்கும் மும்பை சினிமாவில், பாடியை நம்பி நானில்லை, திறமையை நம்பித்தான் இருக்கிறேன் என்பது போல் கதையின் நாயகனாக மாறி நடித்த தனுசின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். 

அங்குள்ள தமிழர்கள் மட்டுமல்லாது, சோனம்கபூருக்காக ராஞ்சனாவைப்பார்த்த இந்திவாலாக்களுக்கும்கூட தனுஷின் நடிப்பு ரொம்ப பிடித்திருக்கிறதாம். 

இதனால் சுள்ளானாக பாலிவுட்டுக்கு சென்று சூடுகாட்டியிருக்கும் தனுசை வைத்து அடுத்தடுத்து படம் இயக்க அங்குள்ள படாதிபதிகள் தயாராகியுள்ளார்களாம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...