இனி சந்தானம் வேண்டாம் - ஹீரோக்கள் அதிரடி முடிவு


சந்தானம் தான் வேண்டும், அவர் இருந்தால்தான் எங்களுக்கு ஒரு பேலன்சாக இருக்கும் என்று சிம்பு, ஆர்யா, கார்த்தி, சித்தார்த் உள்பட பல ஹீரோக்கள் அவரை கேட்டு வாங்கி வருகின்றனர். 

அவர் இப்போது என்னால் கால்சீட் தர முடியாது. இன்னும் 6 மாதமாகும் என்று சொன்னாலும், பரவாயில்லை கடைசி நேரத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிக்கொள்ளலாம் என்று அவரை விடாமல் பிடித்து வருகின்றனர். 

அதிலும், உதயநிதி போன்ற வளர்ந்து வரும் நடிகர்கள், சந்தானத்தை தங்களுக்கு இணையாக நடிக்க வைத்து தங்கள் மைனஸை ப்ளசாக்கிக்கொண்டு வருகின்றனர். 

இதனால், முன்னணி ஹீரோக்களை விட வளர்ந்து வரும் ஹீரோக்களுக்கு சந்தானம் முக்கியமானவராகி விட்டார். 

ஆனால், அப்படி அவருக்காக காத்திருக்கும அவர்கள், படங்களை முடித்து விட்டு தாங்கள் மாதக்கணக்கில் காத்திருந்தும் சந்தானம் வருவதற்கான சூழ்நிலை இல்லாமல் இருப்பதால் அவர் மீது வெறுப்பில் இருக்கிறார்கள். 

அதிலும், ஒரு கல் ஒரு கண்ணாடியில் சந்தானத்துடன் இணைந்து நடித்த உதயநிதி, இப்போது நடித்து வரும் இது கதிர்வேலன் காதல் படத்தின் படப்பிடிப்பு முடித்தவர் சந்தானத்துக்காகத்தான் காத்திருக்கிறாராம். 

ஒருவழியாக அவர் வந்து விடுவார் என்றாலும், இனிமேல் தான் நடிக்கிற படங்களில் அவருக்காக காத்திருக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளராம். 

தான் அழைத்த நேரத்தில் வந்து நடித்துக்கொடுத்து விட்டு செல்லும் ஒரு காமெடியனாக பார்த்து ஒப்பந்தம் செய்யப்போகிறாராம். இதே முடிவை மேலும் சில ஹீரோக்களும் எடுத்திருப்பதாக தெரிகிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...