படப்பிடிப்பு தளத்திலேயே ஆர்யாவை மனைவி போன்று உபசரித்த நயன்தாரா


ஆர்யா-நயன்தாரா இருவருக்குமிடையே சினிமாவுக்கு வெளியே ஏதோஒரு அந்நியோன்யமான உறவு இருக்கிறது என்பது நீண்டகாலமாக கூறப்பட்டு வருகிறது. 

அதை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது அவர்கள் நடித்துள்ள ராஜாராணி படப்பிடிப்பில் அதிக நெருக்கமாக, இணக்கமாக நடந்து கொண்டார்களாம். 

அதாவது ஆர்யாவைக்கண்டாலே நயன்தாராவின் முகத்தில் ஒருவித பாசம் பீறிடுகிறதாம்.

இருவரும், ரகசிய புன்னகை பூத்தபடி தங்களை சுற்றி பலர் அமர்ந்திருந்தாலும், அவர்களுக்கு கேட்காத வகையில் ஒருவர் காதில் ஒருவரர் ரகசியம் பேசுவது போல் யாருக்குமே கேட்காத வகையில் பேசுகிறார்களாம். 

இப்படியே போகப்போக ஆர்யாவின் தோளில் சாய்ந்து கொள்கிறாராம் நயன்தாரா. 

அதோடு, படத்தில் கணவன்-மனைவியாகவே நடிக்கும் அவர்கள், கேமரா முன்பு வந்து விட்டால், அந்த ஒட்டல் உரசலுடன் நடித்து சுற்றியிருப்போரையே சூடேத்துகிறார்களாம்.

இதை சிலர் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே. ரெண்டு பேரும் நிஜமாலுமே சேர்ந்துட்டாங்களோ என்று சிலர் பட டைரக்டர் அட்லியிடம் கேட்க, ஏற்கனவே அவர்கள் நெருக்கமான ப்ரண்ட்சுதான். 

ஆனா இந்த படத்தோடு கதைப்படி கணவன் மனைவிங்கிறதால நிஜ வாழ்க்கைய பிரதிபலிக்கிற வகையில் நடிச்சிட்டு வர்றாங்க. அவர்களோட இந்த நடிப்பு என்னோட கதைக்கு பெரிய பலமாகப்போவுது என்கிறார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...